உதவித் தொகை கிடையாது: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் ஏழை பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்யும் வகையிலும் தாலிக்கு தங்கம் திருமண உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது.
அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. திருமணத்திற்கு 15 நாளுக்கு முன்னர் மணப்பெண்ணின் பெற்றோர், இருப்பிடச்சான்று, வருமானச் சான்று, திருமண பத்திரிக்கை உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். திருமணம் முடிந்ததும், அதனை பதிவு செய்து பதிவு சான்றிதழுடன் விண்ணப்பித்தால் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய முடியும்.
இந்த நிலையில், தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் திருமண நிதி உதவி
பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமண
நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் அகியவை மிகவும் நலிந்த நிலையில் உள்ளோரைச் சென்றடையும் வகையில் இத்திட்டம் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment