தனுஷின் மரணத்துக்கு மோடி அரசே பொறுப்பு: திருமா கண்டனம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 12, 2021

தனுஷின் மரணத்துக்கு மோடி அரசே பொறுப்பு: திருமா கண்டனம்

தனுஷின் மரணத்துக்கு மோடி அரசே பொறுப்பு: திருமா கண்டனம்

சேலம் மாவட்டம் கூளையூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் இவரது இரண்டாவது மகன் தனுஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கான பயிற்சி பெற்று கடந்த இரண்டுமுறை நடைபெற்ற இரண்டு தேர்வுகளிலும் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் மீண்டும் முயற்சி செய்யும் விதமாக இன்று நடக்கவிருந்த நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்த தனுஷ் இந்த நீட் தேர்விலும் தான் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் இன்று அதிகாலை தன் வீட்டின் முற்றத்தில்
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தனுஷ் மரணத்திற்கு மோடி அரசே காரணம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

'குட் பை நண்பர்களே'... இதுதான் கடைசி... கதறி அழும் ஜிபி முத்து..!

அதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ''நீட் தேர்வு அச்சத்தால் தம்பி தனுஷ் தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட துயரம் தாளவியலாத கொடுமை. ஏற்கனவே இருமுறை தேர்ச்சிப் பெற்றும் மருத்துவம் பயில இடம் கிட்டவில்லை. இம்முறையும் இடம் கிடைக்காமற்போனால் என்ன செய்வதென்று அஞ்சிக் கூடுதல் மனஅழுத்தத்திற்கு ஆளாகி பலியாகியிருக்கிறான் .இதற்கு மோடி அரசே பொறுப்பு. இத்தகைய தற்கொலைகளுக்குப் பலியானோரின் குடும்பத்தினருக்கு குறைந்தது இரங்கல்கூட தெரிவிக்க மோடி அரசு முன்வரவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு மசோதாவைத் தாக்கல் செய்யவுள்ளது எனும் முதல்வரின் அறிவிப்பு ஆறுதல் அளிக்கிறது.மாண்புமிகு முதல்வருக்கு எமது நன்றி. தனுஷ் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்கள், நீட்தேர்வுக்காகத் தற்கொலை செய்யும் போக்கை முற்றாகக் கைவிட வலியுறுத்துகிறேன்'' என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad