நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு - பச்சைக்கொடி காட்டிய மாநில அரசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 2, 2021

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு - பச்சைக்கொடி காட்டிய மாநில அரசு!

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு - பச்சைக்கொடி காட்டிய மாநில அரசு!



வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல், பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு அனுமதி அளித்துள்ளது
கேரள மாநிலத்தில், கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதை அடுத்து, வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், 1 ஆம் வகுப்பு முதல், 7 ஆம் வகுப்பு வரை மற்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து, தமிழகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில், பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில், கடந்த சில நாட்களாக, நோய்த் தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதை அடுத்து அம்மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக, கேரள மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
மாநிலத்தில் உள்ள பள்ளிகளில், வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், 1 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரை மற்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி 50 சதவீத மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்படும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் போட்டிருக்க வேண்டும்.இதே போல், வரும் 18 ஆம் தேதி முதல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். வரும் 25 ஆம் தேதி முதல், 50 சதவீத இருக்கைகளுடன், திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. திரையரங்குகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோசுகளும் போட்டிருக்க வேண்டும்.பிஜேபிகாரர்கள் பேச்சு நகைச்சுவையானது; கனிமொழி பேட்டி

திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 20-ல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கிராமசபைக் கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad