கொரோனாவால் உயிரிழப்போரில் 90% பேர் தடுப்பூசி போடாதவர்கள் - ராதாகிருஷ்ணன் தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, October 3, 2021

கொரோனாவால் உயிரிழப்போரில் 90% பேர் தடுப்பூசி போடாதவர்கள் - ராதாகிருஷ்ணன் தகவல்!

கொரோனாவால் உயிரிழப்போரில் 90% பேர் தடுப்பூசி போடாதவர்கள் - ராதாகிருஷ்ணன் தகவல்!


கொரோனா தொற்றால் உயிரிழப்போரில், 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் நான்காம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் நான்காம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
தமிழகத்தில் 3 கட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் வெற்றியை தந்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 24 ஆயிரத்து 760 மையங்கள் மற்றும் சென்னையில் ஆயிரத்து 600 இடங்களிலும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

மரபணு பகுப்பாய்வு கூடத்தில் டெல்டா தவிர புதியவகை கொரோனா இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், மேற்கு மாவட்டங்களில் தொற்று குறைவதற்கான அறிகுறி தென்படத் தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், கொரோனா இறப்பில் 90 சதவீத உயிரிழப்பு தடுப்பூசி செலுத்தாதவர்கள் என்றும், 60 வயதுக்கு மேலானவர்களுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.மேலும் தற்போது கொரோனாவுடன் டெங்கு பாதிப்பும் கவனிக்கப்பட வேண்டி உள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Post Top Ad