ரயில் பயணிகள் செம ஹேப்பி; தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 2, 2021

ரயில் பயணிகள் செம ஹேப்பி; தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

ரயில் பயணிகள் செம ஹேப்பி; தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!



சிறப்பு ரயில்களின் இயக்கம் குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பேரிடர் ஏற்படுத்திய தாக்கத்தால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அப்போது புலம்பெயர் தொழிலாளர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. இந்த சேவை மற்ற பயணிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. பின்னர் பயணிகளின் தேவைக்கு ஏற்ப பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்த சூழலில், ரயில் போக்குவரத்தும் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது. தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் பெரிதும் குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்பு நிலவரம்

கடந்த மே மாதத்தின் இறுதியில் தினசரி தொற்று 36 ஆயிரத்தை தாண்டி உச்சம் தொட்டது. அதன்பிறகு படிப்படியாக குறைந்து தற்போது 1,600க்கும் கீழ் சரிந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி புதிதாக 1,578 பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி இருக்கின்றனர். 1,607 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 24 பேர் மட்டும் பலியாகி இருக்கின்றனர். கொரோனா நோயாளிகளாக 17,046 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையொட்டி பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
வழக்கமான ரயில் சேவை

ஏற்கனவே செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 - 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 1 - 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு ரயில்வே முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வந்த விரைவு ரயில்கள் அனைத்தும், நவம்பர் மாதம் முதல் வழக்கமான ரயில் சேவைகளாக இயக்கப்படும்.பிஜேபிகாரர்கள் பேச்சு நகைச்சுவையானது; கனிமொழி பேட்டி
கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பெரிய அளவில் உயிர் சேதத்தை தவிர்க்க முடிந்தது. தற்போது நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. வரும் நவம்பர் மாதம் முதல் வழக்கமான பெயர்களில் ரயில்கள் இயங்கும். அதற்கான பணிகளில் ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் தெற்கு ரயில்வேயில் ஆளில்லா ரயில்வே கேட் இல்லாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதற்கான பராமரிப்பு பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. இதேபோல் விரைவு ரயில்கள் சிக்னல் பிரச்சினையால் ரயில் நிலையங்களில் நின்று செல்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும். அடுத்த மாதம் முதல் பல்வேறு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். ரயில் பயண நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் அதற்கேற்ப பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad