அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்.... சாட்டை துரைமுருகன் கைதுக்கு நாம் தமிழர் கண்டனம்
நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் சாட்டை துரைமுருகன். சீமானைப் போலவே ஆவேசமாக பேசி வெகுவாக கவனம் ஈர்த்தவர்களில் ஒருவர். ஆனால் அவரின் பேச்சே அவருக்கு பலமுறை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி தலைவர்களைப் பற்றி தவறாக பேசி சர்ச்சையில் சிக்கி அதனால் கட்சியில் இருந்து நீக்கப்படுவதும், பின்னர் சேர்த்துக் கொள்ளப்படுவதுமாக இருந்துவந்தார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கார் உதிரிபாக கடைக்காரரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது துரைமுருகன் திருச்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை முருகன் பல ஆவேசமான வீடியோக்களை தனது யூடியூபில் பதிவு செய்து வருபவர். இவர் திருச்சியில் உள்ள கார் உதிரி பாக கடைக்காரரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment