இன்று 14 கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, November 6, 2021

இன்று 14 கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இன்று 14 கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
 
இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைவதால் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை முதல் குமரி வரை 14 கடலோர மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad