டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, November 9, 2021

டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்!

டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்!

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தென் மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தாழ்வு மண்டலமாக உருமாறி தமிழகத்தை கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மிக கனமழை அடுத்த 3 நாட்களுக்கு பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இந்நிலையில் டெல்டா மாவட்டங்கள் புதுக்கோட்டை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் புதுக்கோட்டை ராமநாதபுரம் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நவம்பர் 11 இல் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என கணிப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad