நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர்... மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்!
நவம்பர் 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நாடாளுமன்ற
குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29 ம் தேதி தொடங்குகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு கேஸ் விலை உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்பதும் இதனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே
நவம்பர் 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவ. 29 ஆம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment