பாலியல் புகார் வந்தா பள்ளிகள் மறைக்கக் கூடாது! – அமைச்சர் எச்சரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, November 19, 2021

பாலியல் புகார் வந்தா பள்ளிகள் மறைக்கக் கூடாது! – அமைச்சர் எச்சரிக்கை!

பாலியல் புகார் வந்தா பள்ளிகள் மறைக்கக் கூடாது! – அமைச்சர் எச்சரிக்கை!

பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படும் என பாலியல் புகார்களை மறைக்கக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.

கோவையில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர், பள்ளி முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி பணிமனையை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் “பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரச்சினை என்றால் அதன்மீது நடவடிக்கை எடுத்தால் பள்ளி பெயர் கெட்டுப்போகும் என பல பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றன. அவ்வாறாக மூடி மறைக்க முயற்சி செய்யாமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad