பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம்: உயர் நீதிமன்றம் உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, December 27, 2021

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!


தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற வேன்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, பொள்ளாச்சியை சேர்ந்த ஜெ.கிருஷ்ணகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே பல்லடம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பாலக்காடு செல்லும் நெடுஞ்சாலை ஆகியவற்றில் போக்குவரத்திற்கும், மக்கள் நடமாட்டத்திற்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரான போக்குவரத்திற்கு வழிவகை செய்ய பொள்ளாச்சி நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை ஆகியவற்றிற்கு உத்தரவிட வேண்டுமெனவும் அவர் தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நெடுஞ்சாலை துறை தரப்பில் 8 வாரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதிகள் சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்க வாய்ப்பளித்து, அதன்பின்னர் ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற வேண்டுமெனவும், அதற்கடுத்த இரண்டு வாரங்களில் அந்த நடவடிக்கை தொடர்பாக விவரங்களை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad