13 புதிய மாவட்டங்கள் உதயம்... தலைநகரமாகும் திருப்பதி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 26, 2022

13 புதிய மாவட்டங்கள் உதயம்... தலைநகரமாகும் திருப்பதி!

13 புதிய மாவட்டங்கள் உதயம்... தலைநகரமாகும் திருப்பதி!




ஆ்ந்திர மாநிலத்தில் புதிதாக 13 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், திருப்பதியை தலைமையிடமாக கொண்டு பாலாஜி மாவட்டம் புதிதாக உதயமாகிறது என்றும் ஆந்திர மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திரா, தெலங்கானா என்று இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. ஹைதராபாத்தை தலைநகராக கொண்ட தெலங்கானா மாநிலம் மொத்தம் 31 மாவட்டங்களை கொண்டுள்ளது. அதேசமயம், ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 13 மாவட்டங்களே உள்ளன.

இந்த 13 மாவட்டங்களும் அதிக பரப்பளவு கொண்டவையாக இருப்பதாலும், மாவட்ட தலைநகரங்கள் வெகு தொலைவில் உள்ளதாலும் அன்றாடம் அரசு சார்ந்த பணிகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உளளிட்ட இடங்களுக்கு செல்ல பொதுமக்கள் அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

இதனால் அவர்களுக்கு நேரமும், பணமும் விரயமாகி வருகின்றது. தேவையற்ற நேர, பண விரயத்தை தவிர்க்கும் பொருட்டு மாநிலத்தில் மொத்தமுள்ள 13 மாவட்டங்கள் ஒவ்வொன்றையும் தலா இரண்டு மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக ஆந்திர மாநில மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

பொதுமக்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றும் விதத்தில், மாநிலத்தின் 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக பிரிக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணியில் வருவாய்த் துறையினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

இந்தப் பணிகள் நிறைவடைந்ததற்கான அடையாளமாக புதிய மாவட்டங்களுக்கான வரைபடங்களை வருவாய்த் துறை அதிகாரிகள், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் வழங்கியுள்ளனர்.

இதன்படி இதுநாள்வரை இருந்து வந்த நெல்லூர் மாவட்டம், நெல்லூர், பொட்டி ஸ்ரீராமுலு என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று அனந்தபுரம் மாவட்டம் அனந்தபுரம், சத்திய சாயி மாவட்டங்களாகவும், கடப்பா மாவட்டம், ஒய்.எஸ்.ஆர். கடப்பா, அன்னமய்யா மாவட்டங்களாகவும் பிரிக்கப்படுகின்றன.

குறிப்பாக சித்தூர் மாவட்டம் சித்தூர், திருப்பதி என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சித்தூர் மாவட்டத்திற்கு சித்தூர் தலைநகரமாகவும், புதிய உருவாகியுள்ள பாலாஜி மாவட்டத்துக்கு திருப்பதி தலைமையிடமாகவும் இருக்கும். புதிய மாவட்டங்கள் உதயம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தெலுங்கு வருட பிறப்பு நாளில் வெளியாகும் என்று ஆந்திர மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad