விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம்.. மத்திய அரசின் திட்டம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 6, 2022

விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம்.. மத்திய அரசின் திட்டம்!

விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம்.. மத்திய அரசின் திட்டம்!



பிஎம் கிசான் உழவர் உற்பத்தி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் வரையில் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கத்தில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் பிஎம் கிசான் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் திட்டம். இத்திட்டத்தின் கீழ் பல்வேறு விவசாயிகள் ஒன்றாக ஒரு அமைப்பாக இணைந்து வேளாண் உற்பத்தியில் ஈடுபடுவர். இதில் விவசாயம் செய்வதற்குத் தேவையான உதவிகள் அவர்களுக்குக் கிடைக்கும்.

இந்த உழவர் உற்பத்தி நிறுவனங்கள் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.15 லட்சம் வரையில் நிதியுதவி வழங்குகிறது. விவசாயிகள் வேளாண்மை தொடர்பான தொழில் தொடங்குவதற்கு உதவுவதே இத்திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும். சிறு குறு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். அவர்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், சந்தை வாய்ப்பைப் பெருக்கவும், தொழில்நுட்ப அம்சங்களைப் பயன்படுத்தி தொழிலை வளர்க்கவும் இத்திட்டம் உதவுகிறது.

அதில் FPO என்ற ஆப்சனில் பதிவு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் வழங்க வேண்டும். கடைசியாக submit கொடுக்க வேண்டும்.

மத்திய அரசின் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்குத் தேவையான நிதியுதவி கிடைக்கிறது. ஏற்கெனவே பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி 1ஆம் தேதியில்தான் இத்திட்டத்தின் 10ஆவது தவணைப் பணம் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad