கனிமொழியை கார்னர் செய்யும் கழகம்! இளைஞர் அணி Vs மகளிர் அணி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 6, 2022

கனிமொழியை கார்னர் செய்யும் கழகம்! இளைஞர் அணி Vs மகளிர் அணி!

கனிமொழியை கார்னர் செய்யும் கழகம்! இளைஞர் அணி Vs மகளிர் அணி!



நேரில் வாழ்த்து சொல்ல முடியவில்லை என்றால் கூட சமூக வலைதளத்தின் மூலமாகவாவது உதயநிதி பிறந்தநாள் வாழ்த்துக்களை அக்காவிற்கு தெரிவித்திருக்கலாம். ஆனால் அந்த நன்றி கூட இளைஞர் அணி செயலாளருக்கு இல்லை என்கின்றனர் மகளிர் அணியினர்

திமுக ஆட்சிக்கு வந்த 8 மாத காலத்தில், அவரது செல்வாக்கும், அவருக்கான முக்கியத்துவமும் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியிருக்கிறது. அதற்கு ஒரு உதாரணம், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிறந்தநாள் அன்று அந்தக்கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என ஒருவர் தவறாமல் மூத்த அமைச்சர்கள் உட்பட அனைவரும் உதயநிதியைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

ஆனால் கட்சியின் மூத்த நிர்வாகி, மகளிர் அணியின் செயலாளர் எனப் பொறுப்பில் இருக்கும் திருமதி கனிமொழியின் 54வது பிறந்தநாளில் வெறும் சொற்ப நிர்வாகிகள் மட்டுமே தங்களது வாழ்த்துக்களை நேரிலும், சமூக வலைத்தளங்களின் வாயிலாக (ஜனவரி-5) நேற்று தெரிவித்திருக்கிறார்கள்.

கட்சி நிர்வாகிகளைவிடத் தொண்டர்கள், மாற்றுக்கட்சியினர் பலரும் கனிமொழிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தது பேசு பொருளாகியுள்ளது. குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் தொலைப்பேசியில் அழைத்து கனிமொழிக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது திமுகவின் மூத்த நிர்வாகிகள் பலருக்கு ஒருவிதமான அதிருப்தியை கிளப்பியிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சரை நீட் விவகாரம் தொடர்பாகச் சந்திக்க நான்கு நாட்கள் அலைந்தும் டி.ஆர் பாலு தலைமையிலான அனைத்து கட்சியினரின் பிரதிநிதிகளுக்கு நேரம் கிடைக்கவில்லை.

ஆனால் உள்துறை அமைச்சர் கனிமொழிக்குத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்கிறார். டெல்லி அரசியலில் கைதேர்ந்த கனிமொழியிடம் இந்த பொறுப்பை ஸ்டாலின் கொடுத்திருந்தால் எளிதாக இந்த வேலையை முடித்திருப்பார் என்கிறார்கள் சிலர் திமுக தொண்டர்கள்.

கட்சி நிர்வாகிகளைவிடத் தொண்டர்கள், மாற்றுக்கட்சியினர் பலரும் கனிமொழிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தது பேசு பொருளாகியுள்ளது. குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் தொலைப்பேசியில் அழைத்து கனிமொழிக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது திமுகவின் மூத்த நிர்வாகிகள் பலருக்கு ஒருவிதமான அதிருப்தியை கிளப்பியிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சரை நீட் விவகாரம் தொடர்பாகச் சந்திக்க நான்கு நாட்கள் அலைந்தும் டி.ஆர் பாலு தலைமையிலான அனைத்து கட்சியினரின் பிரதிநிதிகளுக்கு நேரம் கிடைக்கவில்லை.

ஆனால் உள்துறை அமைச்சர் கனிமொழிக்குத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்கிறார். டெல்லி அரசியலில் கைதேர்ந்த கனிமொழியிடம் இந்த பொறுப்பை ஸ்டாலின் கொடுத்திருந்தால் எளிதாக இந்த வேலையை முடித்திருப்பார் என்கிறார்கள் சிலர் திமுக தொண்டர்கள்.

திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி,

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு,

தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,

தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன்,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி

தமிழக தொழிற்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,

தமிழக ஊரகவளர்ச்சி அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்,

தமிழக பால்வளத்துறை அமைச்சர் அமைச்சர் சா.மு.நாசர்,

தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி,

தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு அமைச்சர் அர.சக்கரபாணி,

கோ.தளபதி, எம்.எல்.ஏ (மதுரை வடக்கு),

திமுக துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை,

திமுக சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு,

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு,

விசிக துணைப் பொதுச் செயலாளர், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ்,

திமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முனைவர். டி ஆர் பி ராஜா,

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர், தொமுச சண்முகம்

தமிழக முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர்,திமுக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் என்.சுரேஷ்ராஜன்,

மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ,

திமுக தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் பொ.சிவபத்மநாதன்,

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.சண்முகையா,

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா.

கண்டு கொள்ளாத உதயநிதி!

நடிகர்கள் பிறந்தநாளுக்கு உடனுக்குடன் வந்து டிவிட்டரில் வாழ்த்து சொல்லும் உதயநிதி, சொந்த அத்தை, கழகத்தின் மகளிர் அணி செயலாளர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழிக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவே இல்லையாம். சட்டமன்ற கூட்டத்தொடர் இருந்ததால் நேரில் சொல்லவில்லை என்றாலும், குறைந்தபட்சம் டிவிட்டரிலாவது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கலாம்.

மழை வெள்ளத்தின் போது தீவிர களப்பணியில் தூத்துக்குடியில் கனிமொழி இருந்த போதும் உதயநிதியின் பிறந்தநாளுக்கு டிவிட்டரில் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். நேரில் வாழ்த்து சொல்ல முடியவில்லை என்றால் கூட சமூக வலைதளத்தின் மூலமாகவாவது உதயநிதி பிறந்தநாள் வாழ்த்துக்களை அக்காவிற்கு தெரிவித்திருக்கலாம். ஆனால் அந்த நன்றி கூட இளைஞர் அணி செயலாளருக்கு இல்லை என்கின்றனர் மகளிர் அணியினர்

கனிமொழிக்கும், உதயநிதிக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகக் கருத்து மோதல்கள் இருந்து வருகிறதாம். கடந்த டிசம்பர் 26ஆம் தேதியன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 2,000 இளம் பெண்கள் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுக இளைஞரணியில் இணைந்தனர். அதில் பெரும்பாலான பெண்கள் 18 முதல் 30 வயதுடையவர்கள். பெண்களை மகளிரணியில் சேர்க்காமல் இளைஞரணியில் சேர்த்திருப்பது கனிமொழிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது தேர்தலுக்கு முன்பு இளைஞரணியின் கீழ் தனியாக இளம் பெண்கள் அணியை உருவாக்கும் முயற்சியில் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு அப்போதே எதிர்ப்பும் எழுந்துள்ளது. இந்த விஷயம் ஸ்டாலின் காதுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதும், மகளிரணியில் மட்டுமே பெண்கள் அங்கம் வகிக்க வேண்டும் எனத் தலைமை தெளிவுபடுத்தியுள்ளது. இதையடுத்து அந்த பிரச்சினைக்கு அப்போது முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதாக திமுகவினர் கூறுகின்றனர்..
திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதியின் காலம் வரை கனிமொழியின் அரசியல் செல்வாக்கு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இந்த கால கட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் பலருக்கும் அவரால் குறைந்தபட்சம் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்புகளையாவது உருவாக்கிதர முடிந்தது. தற்போது அவருக்கென கட்சிக்குள் எந்தவொரு செல்வாக்கும் இல்லை. கீதா ஜீவன் மட்டுமே அவரது ஒரே ஆதரவு அமைச்சராக இருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்த மகளிர் அணி நிர்வாகிகள். ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்ட போதே கனிமொழி தனது பங்குக்கு அரசியல் விளையாட்டை ஆரம்பித்திருக்கலாம். குடும்பத்தில் அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டைத் தன் அரசியல் லாபத்திற்காக அறுவடை செய்யாமல் எப்போதும் பொறுமை காத்து தன்னால் கட்சிக்கு எந்தவொரு கெட்ட பெயரும் வந்துவிடாமல் ஒரு நல்ல தங்கையாக கண்ணியமாகவே நடந்து கொண்டார்.

கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் சிறிதும் வருந்தக் கூடாது என்பதற்காக . தனது 54வது பிறந்தநாளில் கூட அண்ணன் ஸ்டாலின், அண்ணி துர்கா ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இப்படி இருக்க உதயநிதி ஸ்டாலின், அவரது மைத்துனர் சபரீசன் உள்ளிட்டோர் கனிமொழிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதை வேண்டுமென்றே தவிர்த்துள்ளனர். இது தெரியாமல் வாழ்த்து தெரிவித்த ஒரு சில மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் தங்களுக்கும் கட்சிக்கும் சிக்கல் வருமோ எனப் புலம்பிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. திமுகவின் முக்கிய அதிகார மையமாகியுள்ள உதயநிதி - சபரீசன் காம்போ கட்சி நிர்வாகிகளின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்கிறதாம். கனிமொழியை தூத்துக்குடியோடு கூண்டில் அடைத்ததும் இவர்களின் ராஜ தந்திரம் தான் என்கிறார்கள்.


No comments:

Post a Comment

Post Top Ad