ரேஷன் பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து அட்டூழியம்: திமுக ஆட்சியில் சூப்பர் கொள்ளை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 6, 2022

ரேஷன் பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து அட்டூழியம்: திமுக ஆட்சியில் சூப்பர் கொள்ளை!

ரேஷன் பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து அட்டூழியம்: திமுக ஆட்சியில் சூப்பர் கொள்ளை!





போடிமெட்டு மலை கிராமத்தில் ரேசன் கடைக்கு வந்த அரிசி மூடையை கடையில் இறங்காமல் பகிரங்கமாக அருகில் உள்ள வீட்டில் பதுக்குவது அம்பலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு-கேரளா எல்லையில் போடிமெட்டு மலை கிராமம் அமைந்துள்ளது. இங்கு போடி ஏ 1468 கூட்டுறவு பண்டகசாலை சொந்தமான ஈகோ 17 என்ற ரேஷன்கடை இயங்கி வருகின்றது.

மணிகண்டன் என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் லாரியின் மூலம் ரேஷன் கடைக்கு அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நேற்று இறக்கிக் கொண்டிருதார்.


அப்போது ரேஷன் அரிசி 100 கிலோ எடையுள்ள மூடைகளை ரேஷன் கடையில் இழக்காமல் 20 மூட்டைகளை அருகிலுள்ள வீட்டில் இறக்கி கொண்டிருந்தனர். இதனை கண்ட பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இதனைக் கண்டும் விற்பனையாளர் அலட்சியமாக செல்வதை வீடியோவில் பதிவாகி உள்ளன. இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல மாதங்களாக இதுபோன்று மூடைகளை கடையில் இறக்காமல் குறிப்பிட்ட 20க்கும் மேற்பட்ட மூடைகளை அருகில் உள்ள வீடுகளில் இறக்கி வைத்து இரவில் ஜீப் மூலம் கேரளாவுக்கு கடத்துவது தொடர்கதையாகி வருகின்றனது என்றும்,

தற்போது போடிநகர் பகுதியில் இயங்கி வரும் 26ரேஷன் கடைகளில் 50கிலோ எடையுள்ள ரேசன் அரிசிசிற்பம் 500 ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் திடீர் திடீரென அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad