கைக்கூலி அரசு; மீண்டும் வாயை கொடுத்த எச்.ராஜா!
தமிழக அரசு கைக்கூலியாக மாறி இருப்பதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறி இருப்பது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியையும், பாஜகவினர் மத்தியில் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் இந்து கோவில்களில் அறங்காவலர்கள் குழுத் தேர்வு மற்றும் இந்து கோவில்கள் மேம்படுத்துதல், பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கையின் உண்மையை அறிவிக்கக் கோரி இந்து கோவில்கள் மீட்பு இயக்கத்தின் சார்பில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
.
பாராசூட்டில் பறந்து வந்து சேலத்து இளைஞர் சாதனை!
அப்போது எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவிலில் உள்ள தங்கத்தை டிரஸ்டி இல்லாமல் உருக்க முடியாது. அறங்காவலர் இல்லாமல் எந்த செயலும் தன்னிச்சையாக செயல்படுத்த முடியாது. எந்த கோவிலும் பணத்துடன் இருந்து விடக் கூடாது என்பதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.
அறநிலையத்துறை அமைச்சர், ஆணையர் ஆகியோர் அறங்காவலர் நியமனம் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கையில் உண்மை தன்மை இல்லை. இந்துகளுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
நீதிமன்ற தீர்ப்பின் படி, பாரம்பரிய கோவில்களில் அறங்காவலருக்கு தான் முன்னுரிமை. எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்க கூடாது. அரசியல் பின்னணியில் இருப்பவர்கள் அறங்காவலர்களாக இருக்க முடியாது என்று நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக சேகரிக்கப்படும் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. இந்து சமய அறநிலையத்துறையில் பக்திமானாக இருக்க வேண்டும். ஆனால் இந்த அரசு அதற்கு மாறாக கோவில்களில் இருக்கும் நிதியை சுரண்டும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment