கொரோனா அச்சம்..விஷம் குடித்த 4 பேர்; மதுரையில் பரபரப்பு!
மூத்த மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 4 பேர் கொண்ட குடும்பத்தினர் விஷம் குடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கல்மேடு அருகே உள்ள எம்ஜிஆர் காலனி பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் தனது மகன் மகள் மற்றும் பேத்தியுடன் வசித்து வந்துள்ளார்.
மூத்தமகள் ஜோதிகாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று பரவும் என்ற அச்சத்தில் லட்சுமி வயது 45, மகள் ஜோதிகா வயது 23, அவரது 3வயது மகன் ரித்தீஷ் மற்றும் லட்சுமியின் மகன் சிபிராஜ் வயது 13 ஆகிய நான்கு பேரும் சாணி பவுடர் விஷ மருந்தை சாப்பிட்டு தற்கொலை முயன்றுள்ளனர்.
இதில் ஜோதிகா மற்றும் ரித்தீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சிலைமான் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஜோதிகாவின் கணவர் கடந்த மாதம் தான் உடல்நலக்குறைவால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment