ஊரடங்கு காலத்தில் விருந்து நிகழ்ச்சி... பிரிட்டன் பிரதமருக்கு சிக்கல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 25, 2022

ஊரடங்கு காலத்தில் விருந்து நிகழ்ச்சி... பிரிட்டன் பிரதமருக்கு சிக்கல்!

ஊரடங்கு காலத்தில் விருந்து நிகழ்ச்சி... பிரிட்டன் பிரதமருக்கு சிக்கல்!



ஊரடங்கு காலத்தில் பொது இடத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது குறி்த்து லண்டன் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதனால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
கொரோனா முதல் அலையின் கடுமையாக தாக்கம் காரணமாக, 2020 மே மாதம் பிரிட்டனில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை என்பது உள்ளிடட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அத்தகைய நெருக்கடியான சூழலில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் லண்டன் நகரில் டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக போரிஸ் ஜான்சனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சன் செய்தன. அத்துடன் அவருக்கு சொந்த கட்சியான கன்சர்வேஷன் கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்தது.

இதனால் வேறு வழியி்ன்றி, கொரோனா விதிமுறைகளை மீறி விருந்தில் பங்கேற்றது தவறு தான் என்று நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக போரிஸ் ஜான்சன் ஒப்பு கொண்டார். ஆனால் அதனை ஏற்காத எதிர்க்கட்சிகள் ஜான்சன் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தின.இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் விருந்து நிகழ்ச்சிகள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடத்தியது குறித்து லண்டன் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் நடைபெற்ற பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் குறித்து ஸ்காட்லாந்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர் என்று மெட்ரோபொலிடன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad