இன்று பேருந்துகள் ஒடாது, கடைகள் அடைப்பு; புதிய தளர்வுகளும் அமல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 8, 2022

இன்று பேருந்துகள் ஒடாது, கடைகள் அடைப்பு; புதிய தளர்வுகளும் அமல்!

இன்று பேருந்துகள் ஒடாது, கடைகள் அடைப்பு; புதிய தளர்வுகளும் அமல்!




முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.


தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜனவரி தொடக்கத்தில் இருந்து தினசரி தொற்று ஆயிரமாக பதிவாகி வந்தது. நேற்று முன்தினம் 8,981 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 10,978 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸை பொறுத்தவரை மொத்தம் 185 பேருக்கு பரவியிருக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோய்த் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிறு முழு ஊரடங்கும், தினசரி இரவுநேர ஊரடங்கும் தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி, இன்று காலை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. எனவே பலசரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் சந்தைகள் இயங்காது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி சந்தைகளில் நேற்றைய தினமே கூட்டம் அலைமோதியது.

இன்று காலை 5 மணி முதல் நாளை காலை 5 மணி வரை அரசுப் பேருந்துகள் எதுவும் இயங்காது. அதாவது நகரப் பேருந்துகள், நீண்ட தூரம் செல்லும் விரைவுப் பேருந்துகள், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்துகள், தனியார், ஆம்னி உள்ளிட்ட அனைத்து பேருந்துகளும் இயங்காது. அதேசமயம் நீண்ட தூரம் செல்லும் விரைவு ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்காது. புறநகர் ரயில்கள் 50 சதவீத எண்ணிக்கையில் மட்டும் இயங்கும். சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில் 113 ரயில்களும், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 60 ரயில்களும், சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில்களும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் 120 ரயில்களும் இயக்கப்படும்.

ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடாது. ரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு செல்லும் பொதுமக்கள் முன்பதிவு செய்த டிக்கெட்களை காண்பித்து தனியார் அல்லது வாடகை வாகனங்களில் பயணிக்கலாம். இன்று டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம் ஞாயிறு முழு ஊரடங்கு நாளில் சில தளர்வுகளும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திருமண நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் அதற்கான பத்திரிகைகளை காண்பித்து பயணிக்கலாம். திருமண மண்டபத்தில் 100 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். மேலும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு மின்னணு வர்த்தக விநியோக முறை, சொந்த விநியோக முறையின் மூலம் உணவுப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad