பள்ளிக்கு வர திடீர் உத்தரவு; ஷாக்கான மாணவ, மாணவிகள்!
முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி மாணவ, மாணவிகள் அனைவரும் உடனடியாக பள்ளிக்கு வருகை தந்து, பாடப்புத்தகங்களை பெற்றுச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் முதலில் மாணவ, மாணவிகள் ஷாக் ஆனாலும் பின்னர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தது. இதனால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தியது. இதற்கிடையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
இதனால் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி கடைகள், ஓட்டல்கள், சினிமா திரையங்கு 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இந்த இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த விதிமுறைகள் உடனடியாக வந்ததை அடுத்து தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறதா? என, அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.அதே சமயம் தற்போது தமிழகத்தில் 1 முதல் 7ம் வகுப்பு வகுப்பு வரை முப்பருவ பாடதிட்ட முறை அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பருவ வாரியாக மாணவ மாணவிகளுக்கு புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது.
முதல் மற்றும் 2ம் பருவத்திற்கு புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில் 2-ம் பருவத்தில் கொரோனா பரவல் காரணமாக 26 நாட்கள் மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்றது.இதன் பின்னர் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது மூன்றாம் பருவம் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் பொங்கல் விடுமுறை முடிந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 7- ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.இன்று முதல் மூன்றாம் பருவ பாடபுத்தகம் மாணவர்களுக்கு வழங்கும் பணி தொடங்கியது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.புத்தகங்கள் வாங்க வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment