டாஸ்மாக் கடைகளில் தடை.. மதுப் பிரியர்களுக்கு கிடுக்குப்பிடி!
முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்துகொண்டே வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு துரிதப்படுத்தியுள்ளது. இதன்படி, டாஸ்மாக் மதுக் கடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
* மதுக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்கக்கூடாது.
* இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி தூர சமூக இடைவெளி இருக்க வேண்டும்.
* ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கடையில் அனுமதிக்கக்கூடாது.
* அனைத்து மதுக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தவறாது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கையுறை, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
* முகக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மது வகைகள் விநியோகிக்கப்பட வேண்டும்.
இந்த அறிவுரைகளை தவிர பல்வேறு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட ஏற்கெனவேஅரசு அறிவுறுத்தியுள்ளது. மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும் கொரோனா நோய் தொற்று ஏற்படாத வகையில் கடைகள் செயல்பட வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment