உச்சம் தொட்டது கொரோனா; பீதியில் உறைந்த மக்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 13, 2022

உச்சம் தொட்டது கொரோனா; பீதியில் உறைந்த மக்கள்!

உச்சம் தொட்டது கொரோனா; பீதியில் உறைந்த மக்கள்!


கொரோனா பாதிப்பு திடீரென உச்சம் தொட்டு இருப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தது. இதனால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தியது. இதற்கிடையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

இதனால் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி கடைகள், ஓட்டல்கள், சினிமா திரையங்கு 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த விதிமுறைகள் உடனடியாக வந்ததை அடுத்து தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறதா? என அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா மூன்றாம் அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று 981 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
அதன்படி கோவை மாவட்டத்தில் இன்று 1162 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 5190 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் 293 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 59 ஆயிரத்து 580 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதுவரை 2528 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்று உயிர் இழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad