ஊரடங்கு கட்டுப்பாடு: இன்று முதல் ஐந்து நாள்களுக்கு தடை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 13, 2022

ஊரடங்கு கட்டுப்பாடு: இன்று முதல் ஐந்து நாள்களுக்கு தடை!

ஊரடங்கு கட்டுப்பாடு: இன்று முதல் ஐந்து நாள்களுக்கு தடை!


இன்று முதல் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வழிபட ஐந்து நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் இல்லங்களில் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்று முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளன. பண்டிகை நாளில் கோயில்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில தினங்களாக பக்தர்கள் கூட்டம் கோயில்களில் அலைமோதியது.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூசத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தைப்பூசத் திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்கவும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்குத் தொடக்கத்திலேயே தடை விதித்ததால் பாதயாத்திரை பக்தர்கள் கோயில் திறக்கப்பட்டிருக்கும் நாட்களை கணக்கில்கொண்டு தங்கள் பாதயாத்திரையை திட்டமிட்டனர்.

இந்நிலையில் அடுத்த அறிவிப்பாக இன்று முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை பக்தர்கள் வழிபடத் தடை என்ற அறிவிப்பால் தைப்பூச தேரோட்டத்துக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நேற்றே பழநி வந்து சேர்ந்ததால் மலைக்கோயில், அடிவாரப் பகுதி மட்டுமின்றி பழநி நகரமே பக்தர்கள் கூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் ஜனவரி18ஆம் தேதி வரை தைப்பூச விழா நடைபெற உள்ளது. கடந்த 3 நாட்களாக திருச்செந்தூரை நோக்கி பாதயாத்திரை பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பாதயாத்திரை பக்தர்கள் மட்டுமின்றி இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், வேன், பேருந்துகளிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad