ஊழியர்கள் வர வேண்டாம்.. ரயில்வே அமைச்சகம் அதிரடி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 4, 2022

ஊழியர்கள் வர வேண்டாம்.. ரயில்வே அமைச்சகம் அதிரடி உத்தரவு!

ஊழியர்கள் வர வேண்டாம்.. ரயில்வே அமைச்சகம் அதிரடி உத்தரவு!


தடுப்பூசி போடாத ஊழியர்கள் ரயில் பவனுக்கு வர வேண்டாம் என அரசு உத்தரவு.
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மூன்றாம் அலையின் தொடக்க நிலையில் இந்தியா இருப்பதாக சுகாதார வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர். எனவே, கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு, மாஸ்க் அணிந்து, தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், ரயில்வே வாரிய அலுவலகத்தில் கொரோனா பரவலை தடுக்க ரயில்வே அமைச்சகம் சில உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.

இதன்படி, ரயில்வே வாரியத்தின் அலுவலகமான ரயில் பவனில் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி போட்டிருப்பதை உறுதிசெய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முதல் டோஸ், இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்னும் கொரோனா தடுப்பூசி போடாத ஊழியர்கள் ரயில் பவன் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படக்கூடாது என ரயில்வே அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அப்படி தடுப்பூசி போடாத ஊழியர்கள் சொந்தமாக விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad