தனியார்மயமாகும் மின்துறை; 144 தடை பிறப்பித்த மாநில அரசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 1, 2022

தனியார்மயமாகும் மின்துறை; 144 தடை பிறப்பித்த மாநில அரசு!

தனியார்மயமாகும் மின்துறை; 144 தடை பிறப்பித்த மாநில அரசு!


மின்துறை அலுவலகங்களில் கூட்டமாக கூடுவதை தடுக்க மின்துறை வளாகத்தில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில மின்துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்துறை ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. மின்துறை தலைமை அலுவலகம் அருகே 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மின்துறை ஊழியர் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மின்துறை ஊழியர்களின் போராட்டம் காரணமாக மின் பராமரிப்பு மற்றும் குடிநீர் விநியோகம், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.இதனிடையே மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்துவது மற்றும் மின்துறை அலுவலகங்களில் கூட்டமாக கூடுவதை தடுக்க, மின்துறை வளாகத்தில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்துறை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கும் மத்தியஅரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 144 தடை உத்தரவையும் மீறி, மின்துறை அருகே மத்திய அரசை கண்டித்து 500 க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்திய அரசை கண்டித்து, கண்டன கோஷங்களை எழுப்பி தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்தனர். ஊழியர்களின் போராட்டம் காரணமாக மின்துறை அருகே பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் புதுவை மின்துறை ஊழியர்களின் போராட்டத்திற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மின்துறையை சேர்ந்த ஊழியர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad