ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு - கல்வித்துறை இப்படியொரு அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, February 23, 2022

ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு - கல்வித்துறை இப்படியொரு அறிவிப்பு!

ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு - கல்வித்துறை இப்படியொரு அறிவிப்பு!



ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று, பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள், தற்போதைய பணியிடங்களில் இருந்து வரும் 28 ஆம் தேதி விலகி, மார்ச் மாதம் 1 ஆம் தேதி புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என, தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி, கல்லூரிகள் சரியாக திறக்கப்படவில்லை. அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன. தற்போது கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்துள்ளதால், கடந்த 1 ஆம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதையடுத்து தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இட மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு, கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி முதல், இன்று (பிப்ரவரி 23 ஆம் தேதி) வரை நடைபெற்றது.இந்நிலையில், பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல், பதவி உயர்வு ஆணைகளை பெற்ற ஆசிரியர்கள், வரும் 28 ஆம் தேதி பணிபுரியும் இடங்களில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும், அனைவரும் புதிய இடங்களில், வரும் மார்ச் மாதம் 1 ஆம் தேதி பணியில் சேர வேண்டும் என்றும், தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad