பள்ளிகள் திறப்பில் மாற்றம்; வெளியானது பரபரப்பு கோரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 1, 2022

பள்ளிகள் திறப்பில் மாற்றம்; வெளியானது பரபரப்பு கோரிக்கை!

பள்ளிகள் திறப்பில் மாற்றம்; வெளியானது பரபரப்பு கோரிக்கை!


தேர்தல் அரசியலுக்காக மாணவர்கள் நலன் பாதிக்க கூடாது என்பதால் பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆறு.சரவணத்தேவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முக்குலத்து புலிகள் கட்சி நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் டெல்டா வைரஸ் கொரோனா, ஒமைக்ரான் இணைந்து சமூக பரவலாக தொடங்கி உள்ளதாக கடந்த மாதம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஊடகங்களுக்கு அறிவித்தார்.

இதன் பிறகு இரவு நேர ஊரடங்கு போடப்பட்டது. பின்னர், ஞாயிறு முழு ஊரடங்கு போடப்பட்டது. டாஸ்மாக் கடைகள் தவிர்த்து வழிபாட்டு தலங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட மறுநாளே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகிறது.
இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் அன்றாடம் 27 ஆயிரம் பேர் கொரோனா தொற்று பாதிக்கும்போது எதற்காக ஊரடங்கை தளர்த்தி பள்ளிகளை திறக்க வேண்டும்?

தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் ஊரடங்கு போட மாட்டோம் என்பதை அரசு உத்தரவாதம் அளிக்குமா? பள்ளி மாணவர்களுக்கு 15 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதுவும் 2 டோஸ் போட வில்லை. எதன் அடிப்படையில் கொரோனாவால் மூடி இருந்த பள்ளிக்கூடங்களை 1ம் வகுப்பு முதல் திறக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும்.
பள்ளிகள் திறப்பதால் எந்த பாதிப்பும் வராது. என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? என பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார்களா? தேர்தல் அரசியலுக்காக மாணவர்கள் நலனை பாதிக்க கூடாது. பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad