தஞ்சை மாணவி வழக்கு: விசாரணையை தொடங்கிய சிபிஐ..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, February 21, 2022

தஞ்சை மாணவி வழக்கு: விசாரணையை தொடங்கிய சிபிஐ..!

தஞ்சை மாணவி வழக்கு: விசாரணையை தொடங்கிய சிபிஐ..!


தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் முதல் விசாரணையை தொடங்கியது சிபிஐ    தஞ்சை மாவட்டம், மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி பூச்சி மருந்தை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்து பின்னர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மாணவியை படிக்க விடாமல் அதிகமான வேலை வாங்கி மன உளைச்சலுக்கு காரணமாக இருந்த விடுதிக் காப்பாளர் சகாயமேரியை போலீசார் கைது செய்தனர்.
அதன் பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு வெளியே வந்தார். இதனிடையே, மாணவியின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி உள்ளிட்ட வேறேதாவது அமைப்பை விசாரிக்க உத்தரவிடக்கோரி மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவசர மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துகொண்ட நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன், மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். தமிழக அரசுக்கு அதை எதிர்த்துஉச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி, மாணவியின் தற்கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையை சிபிஐ இன்று பதிவு செய்த நிலையில், ஐஜி வித்தியா குல்கர்னி தலைமையில் 10 பேர் கொண்ட குழு இன்று மாணவியின் பள்ளியில் விசாரணையை தொடங்கியுள்ளது. பள்ளி விடுதி காப்பாளர் மற்றும் மாணவ, மாணவர்களிடம் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் முழு விவரம் தெரியவரும்.

அது மட்டுமில்லாமல், மாணவி தற்கொலை வழக்கில் நிபந்தணை ஜாமீனில் வெளிவந்த காப்பக நிர்வாகியை திருச்சி மத்திய சிறை வாசலில் சால்வை அணிவித்து வரவேற்ற திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad