அய்யோ... இப்படியும் ஒரு கொடூர ரவுடியா..? 13 கொலை... விழுப்புரம் க்ரைம் சீன்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, March 15, 2022

அய்யோ... இப்படியும் ஒரு கொடூர ரவுடியா..? 13 கொலை... விழுப்புரம் க்ரைம் சீன்...

விழுப்புரத்தில் பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி அறிவழகனை கண்டமங்கலம் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

விழுப்புரம் நகரபகுதியான கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபல ரவுடியான அறிவழகன் மீது கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 3 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள், 2 நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி, 9 வழிப்பறி கொள்ளை 3 தகராறு வழக்குகள் என மொத்தம் 21 வழக்குகள் உள்ளன.
இதில் 13 வழக்குகளில் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து ரவுடி அறிவழகனை விழுப்புரம் போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், விழுப்புரத்தையடுத்த கண்டமங்கலத்தில் உள்ள வள்ளலார் அரசு பள்ளி அருகே கண்டமங்கலம் காவல் ஆய்வாளர் ரத்தினசபாபதி, போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சபாபதி என்பவரின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து ரவுடி அறிவழகன் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த 5 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றார். உடனே அறிவழகனை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

தீராத சந்தேக புத்தி... மரணமே தீர்வு..? தாய் சடலத்துடன் 42 மணி நேரம் அடைக்கப்பட்ட மகள்கள்
பின்னர் அறிவழகனை விழுப்புரம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், கடந்த 2015 ஆம் ஆண்டு காலை விழுப்புரம் நகராட்சி பூங்காவில் இறகுப்பந்து விளையாடிக்கொண்டிருந்த விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதையை சேர்ந்த ரவுடி பத்தர்செல்வத்தை முன்விரோதம் காரணமாக அறிவழகன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்ததோடு பத்தர்செல்வத்தின் தலையை மட்டும் துண்டித்து அதை எடுத்துக்கொண்டு நகராட்சி பூங்காவில் இருந்து நடந்தே விழுப்புரம் காந்தி சிலை வரை சென்று அங்கு அந்த தலையை கீழேபோட்டு அதனை கால்பந்து உதைப்பதுபோல் உதைத்துவிட்டு அருகில் உள்ள நகர காவல் நிலையத்தில் சரணடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad