மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அறிவித்த ஹேப்பி நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, March 26, 2022

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அறிவித்த ஹேப்பி நியூஸ்!

திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண் அட்டை வழங்க 3 நாட்கள் சிறப்பு முகாம் வரும் 29 முதல் 31 வரை நடைபெறும் என ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

"திருச்சிராப்பள்ளி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இணைந்து 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை ஒரு வருட காலத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்து வழங்கப்பட உள்ளது.
வரும் 29.03.2022, 30.03.2022 மற்றும் 31.03.2022 ஆகிய மூன்று தினங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் அரங்கிற்கு பின்புறம் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதில், பார்வையற்றோர்கள், கை, கால் பாதிக்கப்பட்டோர்கள், மனவளர்ச்சி
குன்றியோர்கள் மற்றும் காது கேளாதோர் (ம) வாய் பேச இயலாதோர்கள் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது இலவச பேருந்து பயண அட்டையினை புதுப்பித்துக் கொள்ளலாம் மற்றும் புதிய அட்டை வேண்டுபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முதல்வர் துபாய் பயணம்; அண்ணாமலை அரசியல்; சுளுக்கெடுத்த கே என் நேரு!
முகாமில் கலந்துக் கொள்ளும் பார்வையற்றோர்கள் இலவச பேருந்து பயண அட்டை பெறுவதற்கு மாற்றத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல் 2, தனித்துவ அடையாள அட்டை (UDID) நகல் 2, தற்போது எடுக்கப்பட்ட பாஸ்போட் அளவு உள்ள புகைப்படம் 3, கை கால் பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சி குன்றியோர்கள் மற்றும் காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர், கல்லூரி மற்றும் சிறப்பு பள்ளிகளுக்கு செல்வோர் கல்வி பயிலும் நிறுவனத்தில் கல்வி பயிலும் சான்று (Bonafide), சுயதொழில் செய்வோர் கிராம நிர்வாக அலுவலரிடம் பணிபுரிவதற்கான சான்று, தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோர் நிர்வாகத்திடம் பணி சான்று மற்றும் மருத்துவ சிகிச்சைகாக செல்பவர்கள் அரசு மருத்துவரிடம் சான்று ஆகியவற்றை பெற்று, இந்த சிறப்பு முகாமில் விண்ணப்பித்துடன் இந்த முகாமில் விண்ணப்பித்தால் உடனடியாக இலவச பேருந்து அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளலாம்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad