மார்ச் 31 க்கு பிறகு பணி நீக்கம்; அச்சத்தில் உறைந்த டாக்டர்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, March 26, 2022

மார்ச் 31 க்கு பிறகு பணி நீக்கம்; அச்சத்தில் உறைந்த டாக்டர்கள்!

மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கிடைத்த தகவலால் அரசு கிளினிக் டாக்டர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கடலூர் கடற்கரை சாலையில் உள்ள சுகாதாரத் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு கிளினிக் மருத்துவர்கள் திடீரென திரண்டனர். அப்போது அவர்கள் சுகாதாரத் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த கோரிக்கை மனுவில் அரசு கிளினிக் மருத்துவர்கள் கூறியிருப்பதாவது:

கடலூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதல் அரசு மினி கிளினிக்கில் நாங்கள் பணி அமர்த்தப்பட்டோம். இதன் பின்னர் தடுப்பூசி போடும் பணி, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளில் ஈடுபட்டு வந்தோம்.

ஆனால் கடந்த ஜனவரி மாதம் முதல் எங்களுக்கு தமிழக அரசு சம்பளம் வழங்கவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டு கேட்டும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் வருகிற மார்ச் 31ம் தேதிக்கு பிறகு எங்களை பணி நீக்கம் செய்ய போவதாக தகவல் கிடைத்து இருக்கிறது. இந்த அறிவிப்பால் எங்களின் வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும்.

எனவே அம்மா கிளினிக் மருத்துவர்களின் பணியை நீட்டிப்பு செய்ய வேண்டும். கடந்த 3 மாதங்களாக வரவேண்டிய ஊதிய நிலுவை தொகை வழங்க வேண்டும். மேலும் கொரோனா காலத்தில் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கிய சிறப்பு உதவித் தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அரசு கிளினிக் மருத்துவர்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதன் காரணமாக கடலூர் சுகாதாரத் துறை அலுவலகத்தில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் திரண்டு இருந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad