மாடு முதல் புரோக்கர் வரை.. உத்தரப் பிரதேச தேர்தல் முடிவை தீர்மானிக்கும் விவசாயிகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, March 9, 2022

மாடு முதல் புரோக்கர் வரை.. உத்தரப் பிரதேச தேர்தல் முடிவை தீர்மானிக்கும் விவசாயிகள்!

உத்தரப் பிரதேச தேர்தல் முடிவை தீர்மானிக்கும் விவசாயிகளின் பிரச்சினைகள்.

உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. உ.பியில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக மீது மக்கள் என்ன மனநிலையை கொண்டுள்ளனர் என்பதை தெரிந்துகொள்வதற்கு மட்டுமல்லாமல், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் உ.பி தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன.

உத்தரப் பிரதேச தேர்தலில் சமூகம் சார்த வாக்குகள் ஒருபுறம் இருக்க, விவசாயிகளின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக, மேற்கு உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியை விவசாயிகள் கொண்டுள்ளனர்.
உ.பி தேர்தலுக்கு முன்பாக விவசாயிகளை கருத்தில் கொண்டு மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த தேர்தலில் விவசாயிகள் யாருக்குதான் வாக்களித்தனர்? அதற்கு விவசாயிகள் சந்தித்த பிரச்சினைகளை முதலில் கவனிக்க வேண்டும்.

முதலில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கான பெரும் பிரச்சினையாக இருந்தது. சட்டங்களை அரசு ரத்து செய்துவிட்டாலும் விவசாயிகள் மோசமாக நடத்தப்பட்டது அவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், உத்தரப் பிரதேசம் முழுவதும் நிறைந்து சுற்றித் திரியும் மாடுகள் விவசாயிகளுக்கு மற்றொரு தலைவலியாக உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் பசுவதை தடுப்பு நடவடிக்கைகளால் மாடுகளின் எண்ணிக்கை கணக்கு வழக்கின்றி உயர்ந்துவிட்டன.

இம்மாடுகள் விவசாயப் பயிர்களை தின்று நாசம் செய்கின்றன. ஆனால், இதுபற்றி யோகி ஆதித்யநாத் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருப்பினும், மாடுகள் ஒரு பிரச்சினையாக இருப்பதை பாஜக தலைமை தெரிந்துகொண்டுள்ளது. எனவே, மாடுகள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.

இதுபோக, விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானாவில் விவசாயிகளுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை அளவுக்கு உ.பி விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. பயிர்களில் கிடைக்கும் லாபத்தை இடைத்தரகர்களாக இருக்கும் புரோக்கர்கள் கொள்ளை அடிக்கின்றனர் என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த மூன்று பிரச்சினைகளும் விவசாயிகள் யாருக்கு வாக்களிக்கின்றனர் என்பதை தீர்மானிப்பதாக உள்ளன. எனவே, இந்த முறை விவசாயிகள் யாருக்கு வாக்களித்துள்ளனர் என்பது தேர்தல் முடிவை தீர்மானிக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad