மக்களை பயத்தில் உறைய வைக்கும் பைக் திருட்டு! - போலீஸ் என்னதான் செய்கிறது? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, March 30, 2022

மக்களை பயத்தில் உறைய வைக்கும் பைக் திருட்டு! - போலீஸ் என்னதான் செய்கிறது?

பழனியில் இருசக்கர வாகன திருட்டு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவில் நகரமாக விளங்குவதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இவ்வாறு பழனிக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் உடமைகளை திருடுவதற்கென பழனி நகரில் ஏராளமானவர்கள்‌ சுற்றிவருகின்றனர்.

இந்நிலையில்‌ பழனிநகரில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகன திருட்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி நேற்று பழனி அரசு மருத்துவ மனையில் பணிபுரியும் தனியார் செக்யூரிட்டி ஊழியர் நாச்சிமுத்து என்பவரின் இருசக்கர வாகனத்தை பட்டப்பகலில் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பழனி தேவாங்கர் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சிலர் திருடிச்சென்ற நிலையில் மீண்டும் ஒரு இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில நாட்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டு நடைபெற்றுள்ளது.
இருசக்கர வாகனத்தை திருடுவதற்காக வெளியூரில் இருந்து மர்மகும்பல் ஏதாவது பழனியில் முகாமிட்டிருக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது‌. வாகனத்திருட்டு குறித்து போலீசார் அறிந்தாலும் அவர்களின் அலட்சியப் போக்கே திருட்டு தொடர்ந்து நடைபெற காரணமாக இருப்பதாகவும், எனவே திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் பழனி நகரின் முக்கிய பகுதியில் போலீசார் இரவு நேர ரோந்து பணிகளை தீவியப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad