உயரும் சுங்கச்சாவடி கட்டணம்: அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, March 30, 2022

உயரும் சுங்கச்சாவடி கட்டணம்: அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு!

நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது

நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.85 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. சரக்கு வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ரூ.45 முதல் ரூ.240 வரை உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பரனூர், சூரப்பட்டு, சமுத்திரம், நெமிலி, வானகரம் ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் தமிழக அமைச்சர் எ.வ.வேலு நேரில் சந்தித்து அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார். தமிழ்நாட்டில் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 8 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த கட்டண உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அண்மையில், 60 கி.மீக்கு குறைவான தொலைவில் உள்ள சுங்கச்சாவடிகள் மூடப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறிய நிலையில், சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து, சரக்கு வாகனங்களுக்கான சுங்க கட்டணம் அதிகரிக்க உள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுங்க கட்டணம் உயர்வுக்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதைக் கண்டித்து, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசின் அறிவிப்பின்படி, பஞ்சாபில் பாட்டியாலா மற்றும் சங்ரூர் சுங்கச்சாவடிகளில் தற்போதைய கட்டணத்தை விட 10 முதல் 18 சதவீதம் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியது வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad