சென்னை மேயர் பிரியாவுக்கு பயிற்சி: ஸ்டாலின் பக்கா ப்ளான்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, March 6, 2022

சென்னை மேயர் பிரியாவுக்கு பயிற்சி: ஸ்டாலின் பக்கா ப்ளான்!

சென்னை மாநகராட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 200 வார்டுகளின் கவுன்சிலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளன

தமிழகத்தில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. குறிப்பாக, 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின், 200 வார்டுகளில், திமுக கூட்டணி 178 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளுங்கட்சியான திமுக மட்டும் 153 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
வெற்றி பெற்ற உறுப்பினர்கள், வரலாற்று சிறப்புமிக்க ரிப்பன் மாளிகையில் கடந்த 2ஆம் தேதி பதவியேற்றனர். தொடர்ந்து, கடந்த 4ஆம் தேதி சென்னை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த 28 வயதான பிரியா பொறுப்பேற்றார். வடசென்னை பகுதியான திரு.வி.க.நகரிலுள்ள 74ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரியாவை திமுக மேயர் வேட்பாளராக அறிவித்தது. அதன்படி, அவர் போட்டியின்றி தேர்வாகி பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை மாநகராட்சி மேயர் பதவியை, 1957 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் முறையே தாரா செரியன் மற்றும் காமாட்சி ஜெயராமன் ஆகிய இரு பெண்கள் அலங்கரித்துள்ளனர். தற்போது மூன்றாவது பெண் மற்றும் முதல் பட்டியலின பெண் மேயராக பிரியா பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். துணை மேயராக மகேஷ்குமார் பொறுப்பேற்றுள்ளார்.

கனிமொழி கோட்டையில் ஸ்டாலின்; மெகா பிளானை இறக்கும் திமுக அரசு!

முன்னதாக, கவுன்சிலர்கள் பதவியேற்பின்போது உறுதிமொழி ஏற்பதில் தடுமாறினர். இது விமர்சனத்துக்குள்ளானது. ஆனால், பெரும்பாலான கவுன்சிலர்கள் புதியவர்கள் என்பதால், இந்த தடுமாற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், கவுன்சிலர் என்பவர் யார், அவர்களுக்கான பணிகள் என்னென்ன என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விளக்கும் வகையில், 200 கவுன்சிலர்களுக்கும் மாநகராட்சி சிறப்பு பயிற்சி வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயிற்சி மூன்று பிரிவுகளாக வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து மாநகராட்சி வட்டாரத் தகவல்கள் கூறுகையில், “சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் புதியவர்களாக உள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சியின் கட்டமைப்பு, அதன் பணிகள், கவுன்சிலர்களுக்கான அதிகாரம் மற்றும் பணிகள், மன்றம், மாமன்ற கூட்டத்தில் தங்கள் வார்டுகளில் கோரிக்கை எப்படி எழுப்புவது, எப்படி பேசுவது, மாமன்றத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு எப்படி தீர்வு ஏற்படுத்துவது என்பன உள்ளிட்டவைகள் குறித்து சிறப்பு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.” என்கிறனர்.
மேலும், பெண்கள் கவுன்சிலர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களது கணவர், சகோதரர், தந்தை, உறவினர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். அவர்களே நிழல் கவுன்சிலர்களாக வலம் வருவர். இதனால், கவுன்சிலர்களின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும். எனவே, அதனை தடுத்து மக்களிடம் நன்மதிப்பை பெறுவது எப்படி என்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது.

ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரியா
ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரியா

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை பெரிதாக விமர்சனங்கள் எதுவும் எழவில்லை. அப்படி எதுவும் விமர்சனங்கள், குறைகள் சுட்டிக்காட்டப்பட்டாலும் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து முதல்வர் ஸ்டாலின் தீர்வு கண்டு வருகிறார். இந்த அணுகுமுறை பொதுமக்களிடையே அவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. எனவே, மக்களோடு மக்களாக கீழ்மட்ட அளவில் செயல்படும் கவுன்சிலர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அதனடிப்படையிலேயே, கவுன்சிலர்களுக்கான இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.
அதேசமயம், சென்னை மேயராக மக்களால் தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக செயல்பட்டவர் ஸ்டாலின். நவீன சென்னை மாநகரின் தந்தை என்று அழைக்கப்பட்ட ஸ்டாலினின் ஆட்சிகாலத்தில் சென்னைக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. சிங்காரச் சென்னையாகவும் விளங்கி வருகிறது. அதற்கு ஸ்டாலின் ஆற்றிய பணிகள் ஏராளம். தற்போது சிங்காரச் சென்னை 2.0 என்ற திட்டத்தை அறிவித்துள்ள ஸ்டாலின், அதனை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார். அதனையே மேயராக பொறுப்பேற்றுள்ள பிரியாவிடமும் எதிர்பார்க்கிறார். இதனால், தான் அலங்கரித்த மேயர் பதவியை அலங்கரிக்கும் பிரியாவுக்கு தனியாக சிறப்பு பயிற்சிகள், ஆலோசனைகள் வழங்கவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad