அந்த வழக்கு போட்டிருந்தால்..! தப்பிய குண்டாஸ்... தலையிட்ட ஸ்டாலின் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 3, 2022

அந்த வழக்கு போட்டிருந்தால்..! தப்பிய குண்டாஸ்... தலையிட்ட ஸ்டாலின்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு குண்டாஸ் வழக்கு போட வாய்ப்பு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அவரை அடுத்த இரண்டு வாரங்களுக்கு திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் ராயபுரம் திமுக நிர்வாகி ஒருவர் கள்ள ஒட்டு போட முயன்றதாக கூறி அவரை அடித்து அரை நிர்வாணப்படுத்திய புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிப்ரவரி 19 இல் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது கொலை முயற்சி, தேர்தல் விதிகளை மீறுதல், தொற்று நோய் பரப்புதல் உள்ளிட்ட வழக்குகள் அடுத்தடுத்து பாய்ந்தன. இதனால் ஜாமீனுக்கு போராடி வந்த ஜெயக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க அரசு தரப்பில் ஆலோசனை நடத்தப்படுவதாக பேச்சுக்கள் எழுந்தன. அதற்காக இளம்பெண் சர்ச்சை (மெயின் ரோடு ஆடியோ) புகார் மூலம் குண்டர் சட்டமோ அல்லது சில மாதங்கள் வரையிலோ ஜெயக்குமார் ஜெயிலில் இருக்கட்டும் என்ற வேலைப்பாடுகள் இருந்தன.

குறிப்பாக இந்த நடவடிக்கைளில் ஜெயக்குமாரின் அரசியல் எதிரியான அமைச்சர் சேகர் பாபுவின் அழுத்தமும் காரணம் என்கின்றனர். ஆனால், ஜெயக்குமார் மீது போடப்படும் குண்டர் சட்டத்தை விரும்பாத ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். அது மட்டுமின்றி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தொண்டர்கள் மூலமாக ஜெயகுமாருக்கு ஆதரவு தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு ஆலந்தூர் நீதிமன்றத்திற்கு வந்த ஜெயக்குமாரை பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பாஜக கொடியுடன் வந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து சென்றதையும் நினைவு கூற வேண்டும்.

அதுமட்டுமின்றி, ஜெயக்குமார் மீது குண்டர் சட்டம் வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதுபோல, ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனும் தனது அரசியல் வட்டாரத்தில் இதுதொடர்பாக அழுத்தம் கொடுக்க, முதல்வர் ஸ்டாலின் அதுகுறித்து சேகர்பாபுவிடம் அறிவுறுத்தியுள்ளார். பல தரப்பில் இருந்து வந்த அழுத்தங்களால் ஜெயக்குமாரின் மீதான வக்கிர பார்வை குறைந்து குண்டர் சட்டம் இல்லாமல் போனதுடன், நீதிமன்றம் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கியபோதும் காவல்துறை அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2012 இல் அ.தி.மு.க.வின் வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்த சேகர் பாபு அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவால் நீக்கப்பட்டு, அந்த பொறுப்பில் ஜெயக்குமார் அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Best Casino in USA 2021 - Dr.MCD
    › Casino › Casino Best Casino in USA 경기도 출장마사지 2021 - Dr.MCD. 안산 출장샵 Best Casino in USA 2021 - 광주 출장마사지 Dr.MCD. Best Casino in USA 2021 - Dr.MCD. Best Casino in 군포 출장안마 USA 2021 - Dr.MCD. Best Casino in USA 2021 - Dr.MCD. Best Casino in USA 2021 수원 출장샵 - Dr.MCD. Best Casino

    ReplyDelete

Post Top Ad