'பதினாறு நெம்பர் டிஜிட்'... தமிழகத்திற்கு தலைவலியை கொடுக்கும் நார்த் இண்டியன்ஸ் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 3, 2022

'பதினாறு நெம்பர் டிஜிட்'... தமிழகத்திற்கு தலைவலியை கொடுக்கும் நார்த் இண்டியன்ஸ்

தமிழக ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் பெரும்பாலானவர்கள் வடமாநிலத்தவர்கள் என்பதால் அவர்களை கண்டறிந்து கைது செய்வதில் சவால் நிறைந்திருக்கிறது என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

வடமாநில ஆன்லைன் மோசடி கும்பலை பிடிப்பதற்கு நெல்லை மாநகர காவல்துறை சிறப்பு தனிப்படை அமைத்துள்ளது என நெல்லை மாநகர காவல் ஆணையாளர் துரைகுமார் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாநகர பகுதிகளில் கைபேசிகள் காணாமல் போனதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் நெல்லை மாநகர சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி கைப்பற்றிய செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. காணாமல்போன, கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் துரை குமார் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையாளர் துரைகுமார், நெல்லை மாநகரத்தில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார் அடிப்படையில் விசாரணை நடத்தி 33 லட்சத்து 5 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 233 கைபேசிகள் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க பட்டு வருகிறது. இணையதளத்தில் பரிசு விழுந்ததாகவும், வேலை வாங்கித் தருவதாகவும் மோசடி செய்த நபர்கள் ஓடிபி, ஏடிஎம், கேஒய்சி போன்றவைகள் மூலம் மோசடியில் ஈடுபட்டது தொடர்பான புகார்கள் அடிப்படையில் விசாரணை நடத்தி 26 லட்சத்து 73 ஆயிரத்து 450 ரூபாய் பறிமுதல் செய்து உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், இணையதள பண மோசடி தொடர்பாக 23 புகார்கள் பெறப்பட்டு மோசடியில் ஈடுபட்ட நபர்களின் கணக்குகளை முடக்கி வைக்கப் பட்டுள்ளதாகவும் சைபர் க்ரைம் பண மோசடி தொடர்பாக தனி குழு அமைக்கப்பட்டு நெல்லை மாநகர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது என தெரிவித்தார். மேலும் ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் வட மாநிலத்தவர்கள் என்பது, வரப்பெற்ற புகார் தொடர்பாக விசாரணை நடத்தியதன் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது. பண மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் போலியான ஆவணங்களை வங்கிகளில் கொடுத்துள்ளதால் மோசடி நபர்களை கைது செய்வது சவாலாக அமைந்துள்ளது.

ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்களை கைது செய்ய நெல்லை மாநகர காவல்துறை சார்பில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு வடமாநிலத்தில் முகாமிட்டு மோசடியாளர்கள் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த தனிப்படை வடமாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் இருக்கும் தகவல் திரட்டபட்டு கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார் .
அதேபோல் நெல்லையை சேர்ந்த ஜெயராஜ் தவமணியை அவரது நண்பரே ஏமாற்றி ஜெயராஜ் தவமணியின் செல்போன் வாங்கி அதன் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்த 22 லட்சம் பணத்தை தனது வங்கி கணக்கி மாற்றியுள்ளார். போலீசார் விரைந்து செயல்பட்டு ஜெயராஜ் தவமணியின் பணத்தை மொத்தமாக மீட்டு கொடுத்துள்ளதால் இன்ப அதிர்ச்சி அடைந்த தவமணி, எனது பணம் திரும்ப கிடைக்கும் என நினைத்து கூட பார்க்கவில்லை எனவே நெல்லை மாநகர காவல் துறைக்கு நன்றி என உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad