அதிமுக போய் திமுக வந்தாலும் பொய் கேஸ் தீரல... விழுப்புரம் இருளர் குடும்பம் வேதனை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, March 5, 2022

அதிமுக போய் திமுக வந்தாலும் பொய் கேஸ் தீரல... விழுப்புரம் இருளர் குடும்பம் வேதனை

மயிலம் அருகே கோவிலில் உண்டியல் திருட்டு வழக்கில் கைது செய்யபட்டுள்ள மூன்று இருளர் சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாக உறவினர்கள் மற்றும் பழங்குடி இருளர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தை அடுத்த கூட்டேரிபட்டு மாரியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து திருடப்பட்ட வழக்கில் கடந்த மார்ச் 2 ஆம் தேதி சந்திரன், பாண்டியன்,குமார் ஆகிய மூவரை மயிலம் போலீசார் கைது செய்து கார்த்தி,சங்கர், விஜி, செல்வம் ஆகிய நான்கு பேர் தப்பி சென்றுவிட்டதாக வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால், கைது செய்யபட்டவர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தில் கரும்பு வெட்டும் பணியில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தவர்கள் என்றும் இப்போது அவர்கள் திருக்கோவிலூர் அருகே உள்ள சித்தலிங்கம் மடத்தில் வசித்து கொண்டு செங்கல் சூளையில் வேலை செய்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

மேலும், அவர்கள் இருளர் சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் போலீசார் வேண்டுமென்றே 7 பேர் மீது பொய் வழக்கு பதிவு செய்து மூவரை கைது செய்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்டவர்கள் 2 ஆம் தேதி நள்ளிரவு 2.45 மணிக்கு கைது செய்துவிட்டு போலீசார் 4 மணிக்கு திருட்டு சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், மற்ற நான்கு நபர்களும் அன்றைய தினம் ஆராமேடு செங்கல் சூளையில் கற்களை புரட்டி போடும் பணியிலிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளார். ஆகையால் மூன்று பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென உறவினர்கள் மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிமுக ஆட்சியை அடுத்து திமுக ஆட்சி பொறுப்பேற்றாலும் காவல் துறையினர் தங்களை மாற்றிக்கொள்ளாமல் பொய் வழக்குகளை போட்டு வருவதாவும், தவறு செய்யும் காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad