அரபிக் குத்த போட்டாத்தான் சரி வரும்... தட்ஸ் ஆல் யுவர் ஆனர்: சீமான் கலகல! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, March 14, 2022

அரபிக் குத்த போட்டாத்தான் சரி வரும்... தட்ஸ் ஆல் யுவர் ஆனர்: சீமான் கலகல!

இந்தியா ஒரே நாடு கிடையாது. ஒரே நாடாக மாற்ற நினைப்பதுதான் பிரிவிணையை தூண்டும் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

குறிஞ்சாங்குளத்தில் தமிழர் வழிபாட்டு உரிமை மீட்கப் போராடி, உயிர்நீத்த ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாய்க்கு ரொட்டித் துண்டுகளை தூக்கி போடுவது போன்று இந்த ஆட்சியாளர்கள் எங்களுக்கு பிரச்சினைகளை தூக்கி போடுகிறார்கள். அதனால், ஆங்காங்கே மக்கள் பிரச்சினைக்காக நாங்கள் போராடுகிறோம் என்றார்.
இது ஒரே நாடு கிடையாது. ஒரே நாடாக மாற்ற நினைப்பதுதான் பிரிவிணையை தூண்டும் என்று சுட்டிக்காட்டிய சீமான், “சர்வ வல்லமை படைத்த அதிகாரம் இருப்பதால், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்றவற்றை கொண்டு வருகின்றனர். ஒரு எம்.பி. உயிரிழந்து விட்டால் ஒரு தேர்தல் வைப்பார்களா ஒட்டுமொத்த நாட்டுக்கே தேர்தல் வைப்பார்களா? மத்தியில் ஒருவேளை கூட்டணி ஆட்சி நடைபெற்று மற்ற கட்சிகள் தங்கள்து ஆதரவை வாபஸ் பெற்றால் ஆட்சி கவிழ்ந்து விடும். அப்படியிருக்கும் பட்சத்தில், ஒட்டுமொத்த மாநிலங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் என்பது அறிவாளிகள் எடுக்கும் முடிவா?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய சீமான், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தினால் செலவு குறையும் என்கிறார்கள். தமிழ்நாட்டு தேர்தலுக்கும், நாடாளுமன்றத் தேர்தலுக்கும் எவ்வளவு ஒதுக்குகிறார்களோ அந்த தொகையைத்தான் செலவு செய்கிறார்கள். அப்புறம் எப்படி செலவு குறையும். ஒரு மாநிலத்துக்கே பல கட்டங்களாக தேர்தல் நடத்தும்போது, ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் எப்படி. அறிவுப்பூர்வமாக, ஆக்கப்பூர்வமாக யோசிக்க வேண்டும். இந்த ஒரே நாடு ஒரே தேர்தலால் நாட்டுக்கு என்ன நல்லது. ஒரே குளத்தில் அனைவரும் குளிக்கலாம்; ஒரே சுடுகாட்டில் அனைவரையும் தகனம் செய்யலாம் என்பதை முதலில் கொண்டு வாருங்கள்.” என்றார்.
இந்தியா என்பது ஒரே நாடு கிடையது என்ற சீமான், அரசியலமைப்பு சட்டப்படி மாநிலங்களால் ஒன்றிணைந்ததுதான் இந்தியா தட்ஸ் ஆல் யுவர் ஆனர் என்றார். மேலும், “பாஜகவின் கோட்பாடு நீட். இந்த நாட்டின் தற்போதைய நிர்வாகம் நீதிமன்றத்தின் குரலாக இருக்கிறது. ஆட்சியாளர்களின் கருத்தை நீதிபதிகளின் வாயிலாக சொல்ல வைத்து விடுகிறார்கள். இந்தியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு நீட் வாய்ப்பை ஏற்படுத்தித்தரும். நீட்டுக்கு வேறு மாதிரியான ஒரு ஆட்டத்தை காட்ட வேண்டும். பீஸ்ட் படத்தில் வரும் அரபிக் குத்து மதிரி ஒன்றை போட்டாத்தான் சரி வரும்.” என்றும் சீமான் அப்போது பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad