சிவசங்கர் பாபா வழக்கு: முக்கிய உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, March 21, 2022

சிவசங்கர் பாபா வழக்கு: முக்கிய உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்!

சிவசங்கர் பாபாவுக்கு எதிராக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுசீல்ஹரி சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் அவருக்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தற்போது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு விசாரணையில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2012 ஏப்ரல், மே மாதத்தில் பாலியல் தொல்லை அளித்தாதாக சிவசங்கர் பாபா, ஆசிரியை தீபா, பக்த்தை கருணாம்பிகை, பாரதி, நீரஜ் ஆகியோர் மீது மூன்றாவது வழக்கு பதிவு செய்யபட்டது.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சிவசங்கர் பாபா, தீபா உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல்,மே மாதங்களில் நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் 2021 ஆம் ஆண்டு புகாரை பெற்று அதற்காக பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், இது தவறு என வாதிட்டார். புகாரில் அளித்த பெண்ணுடன் குற்றம்சாட்டிற்கு உள்ளானவர்களின் தொடர்பு இல்லாத நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக வாதிட்டார்.எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரினார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனு தொடர்பாக பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரினார்.

இதனையடுத்து மனு தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளலாம், ஆனால் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கூடாது என உத்தரவிட்டுள்ளார். மேலும் நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிவசங்கர் பாபாவிற்கு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற கோரி வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 23 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad