'வாட்ஸ் ஆப்'பில் வகுப்புகள் 8ம் வகுப்பு வரை நடத்த உத்தரவு
தொடக்க பள்ளி மாணவர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் பாடம் நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலால், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஓர் ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் வகுப்புகளை நடத்தாவிட்டால், மாணவர்களின் கல்வித்தரம் கடுமையாக பாதிக்கப் படும் என, பெற்றோர்கள் கருதினர். இது குறித்து, நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, தொடக்க பள்ளி ஆசிரியர்கள், தொடர்ந்து பள்ளிக்கு பணிக்கு வரவும், மாணவர்களுக்கு பாடங்களை நடத்தவும், தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து தொடக்க பள்ளி ஆசிரியர்களும், 'ஓபி' அடிக்காமல், தினமும் பள்ளி பணிக்கு வர வேண்டும். நேரத்தை வீணடிக்காமல், 'வாட்ஸ் ஆப்'பில் மாணவர்களை குழுவாக இணைக்க வேண்டும். வீடியோ கால், எஸ்.எம்.எஸ்., வழியாக பாடங்கள், பயிற்சி புத்தகங்கள் மற்றும் இணைப்பு பாடங்களுக்கான பயிற்சிகளை, ஆன்லைனில் வழங்க வேண்டும் என, உத்தரவில் தெரிவிக்க பட்டு உள்ளது.
இதையடுத்து, தொடக்க பள்ளி ஆசிரியர்கள், தொடர்ந்து பள்ளிக்கு பணிக்கு வரவும், மாணவர்களுக்கு பாடங்களை நடத்தவும், தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து தொடக்க பள்ளி ஆசிரியர்களும், 'ஓபி' அடிக்காமல், தினமும் பள்ளி பணிக்கு வர வேண்டும். நேரத்தை வீணடிக்காமல், 'வாட்ஸ் ஆப்'பில் மாணவர்களை குழுவாக இணைக்க வேண்டும். வீடியோ கால், எஸ்.எம்.எஸ்., வழியாக பாடங்கள், பயிற்சி புத்தகங்கள் மற்றும் இணைப்பு பாடங்களுக்கான பயிற்சிகளை, ஆன்லைனில் வழங்க வேண்டும் என, உத்தரவில் தெரிவிக்க பட்டு உள்ளது.
கல்வி 'டிவி' இதுதவிர, கல்வி 'டிவி'யில் மாணவர்களுக்கான பாடங்களை ஒளிபரப்பவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும், 26ம் தேதி முதல் தினமும் பகல், 12:30 மணிக்கு, கல்வி 'டிவி' யில் பாட நிகழ்ச்சிகள் துவங்குகின்றன.முதல், 30 நிமிடங்கள், 8ம் வகுப்பு, பின், 7ம் வகுப்பு என்று படிப்படியாக, ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு வகுப்புக்கு பாடம் நடத்தப்படுகிறது.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment