இலங்கையில் புதிய கொரோனா; காற்றில் ஒரு மணிநேரம் இருக்குமாம்..!!
இலங்கையில் அதிக சக்திவாய்ந்த புதிய கொரோனா பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது காற்றில் ஒரு மணிநேரம் இருக்கக் கூடியது எனவும் இலங்கையில் 3வது அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா 2வது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. உருமாறிய கொரோனாவால் அதிதீவிரமாக பரவிவரும் இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் தற்போது புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களைவிட அதிக சக்தி வாய்ந்தது எனவும், வேகமாக பரவக்கூடியது என்றும் இலங்கை நோய் எதிர்ப்புத்துறை தலைவர் நீலிகா மாலவிகே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மாலவிகே கூறுகையில், 'இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகளை விட புதிய கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காற்றில் ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்கு நீடித்து இருக்கக்கூடியது.
இலங்கையில் சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பின் இந்த வைரஸ் அதிகமாக பரவுகிறது. இதற்கு அதிகமான இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் திரிபு இலங்கையில் 3-வது அலையை உருவாக்கக்கூடும்,' எனக் கூறினார்
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment