உயர்கல்வி நிறுவனங்களில் கொரோனா மையம்
கொரோனா தொற்றின் காரணமாக, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், கொரோனா கவனிப்பு மையங்கள் அமைக்க, அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின், இரண்டாவது அலையால், நாடு முழுதும், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. நிலைமையை சமாளிக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.இந்நிலையில், பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டு, 'ஆன்லைன்' வகுப்புகள் மட்டும் நடத்தலாம் என, அனுமதிக்கப்பட்டது.
அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் தேவைப்படும் இடங்களில், கொரோனா கவனிப்பு மையங்கள் அமைக்க, சுகாதாரத் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு, உயர் கல்வித் துறையும் அனுமதி அளித்துள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் தேவைப்படும் இடங்களில், பல்கலை மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினருடன் பேசி, சில பகுதிகளை கொரோனா கவனிப்பு மையங்களாக செயல்படுத்தலாம் என, கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment