தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு? எதற்கெல்லாம் அனுமதி கிடையாது! எதற்கெல்லாம் அனுமதி!
தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்
தமிழகம் முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வருவதால் ஞாயிற்று கிழமைகளில் ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது.
எதற்கெல்லாம் அனுமதி கிடையாது:
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
இறைச்சி கடைகள்
மீன் மார்க்கெட்
காய்கறி கடைகள்
டாஸ்மாக் மதுக்கடைகள்
சினிமா தியேட்டர்கள்
வணிக வளாகங்கள் உள்பட அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி கிடையாது.
எதற்கெல்லாம் அனுமதி:
பால் வினியோகம்
தினசரி பத்திரிகை வினியோகம்
மருத்துவமனைகள்
மருத்துவ பரிசோதனைக் கூடங்கள்
மருந்தகங்கள்
ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் அனைத்து சரக்கு வாகனங்கள்
விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள், எரிபொருள் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும், அவர்கள் பயணித்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment