பயனுள்ள எளிய வீட்டு குறிப்புகள்.
*வினிகர் கலந்த நீரில் பாதங்களை மூழ்கும்வரை 1/2 மணி நேரம் வைத்திருந்து கழுவ, கால் நகங்களின் அழுக்கு நீங்கி, நகங்கள் சுத்தமாவதோடு, பாதம் சுத்தமாகும்.
*எவர்சில்வர், கண்ணாடி, பீங்கான் பாத்திரங்கள், வினிகரைக் கொண்டு சுத்தம் செய்ய பளிச்சிடுவதோடு, குளியலறை பிளாஸ்டிக் மக், டப்-ஐயும் சுத்தமாக்கலாம்.
*சப்பாத்தி, அடை போன்றவற்றை ஹாட்பேக்கில் வைக்கும்போது அடியில் இரண்டு முள் கரண்டிகளை வைத்துவிட்டால் கடைசி சப்பாத்தி வியர்த்துப் போகாமல் இருக்கும்.
*கீரை கடையும்போது சிறிது அரிசி மாவையும் கரைத்து சேர்த்துக் கடைந்தால் கீரை கெட்டியாக சேர்த்தாற்போல் இருக்கும்.
*தேங்காய்ப்பால் எடுக்கும்போது சிறிது உப்பு சேர்த்தால் பால் நிறைய கிடைக்கும். பிழிவதும் சுலபம்.
*தோசைக்கு அரிசி ஊற வைக்கும்போது உளுந்தைக் குறைத்துக்கொண்டு, வெந்தயத்தைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக்கொண்டால் தோசை சாஃப்ட்டாகவும், டேஸ்ட்டாகவும் இருக்கும். உடலுக்கும் நல்லது.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment