கோவை ஈஷா: 18 சுடுகாட்டில் ஒரு வருடமாக கொரோனா சேவை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 28, 2021

கோவை ஈஷா: 18 சுடுகாட்டில் ஒரு வருடமாக கொரோனா சேவை!

கோவை ஈஷா: 18 சுடுகாட்டில் ஒரு வருடமாக கொரோனா சேவை!

கோவையில் திமுக அமைச்சர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஈஷா சார்பில் முதல்கட்டமாக 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், பிபிஇ கிட்டுகள், முக கவசங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன.

அத்துடன், கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களை மயானத்திற்குக் கொண்டு செல்வதற்காக 2 வாகனங்களும் வழங்கப்பட்டன.

கோவை வந்திருந்த அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் கொரோனா தொற்று சிகிச்சை தொடர்பாக ஆய்வு நடத்தினர். அப்போது சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் நாகராஜன், அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது அவர்களிடம் கொரோனா சிகிச்சைக்கு உதவும் வகையில் கோவை அரசு மருத்துவமனைக்கு 500 பிபிஇ கிட்கள், 5 ஆயிரம் என்95 மாஸ்க்கள், 500 சிபிஏபி முக கவசங்கள் வழங்கப்பட்டன.

அப்போது ஈஷா சார்பில் கோவையில் உள்ள கிராமங்களில் செய்யப்படும் சேவைகள் குறித்து நிருபர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட கிராம மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குவது, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் யோகப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுப்பது, 

முன் களப் பணியாளர்களுக்கு முக கவசம் சானிடைசர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அதேபோல் தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பில் இயங்கும் 18 மயானங்களில் கொரோனா நோயாளிகளைத் தகனம் செய்யும் சேவையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad