அமைச்சர் மா சுப்பிரமணியன் கோவை குறித்து சர்ச்சை பேச்சு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 28, 2021

அமைச்சர் மா சுப்பிரமணியன் கோவை குறித்து சர்ச்சை பேச்சு!

அமைச்சர் மா சுப்பிரமணியன் கோவை குறித்து சர்ச்சை பேச்சு!


கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், அமைச்சர்கள் ராமச்சந்திரன், சக்கரபாணி ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர்:
கோவை மாவட்டத்தில் தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. படிப்படியாகக் குறையும் என நம்பிக்கை இருக்கிறது. முழு ஊரடங்கு கடுமையாக கடைப்பிடிக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேம்பாலப் பணிகளை நிறுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. போதிய அளவு ஆக்சிஜன் படுக்கைகள் இருப்பு உள்ளது. கையில் உள்ள தடுப்பூசிகளை உடனடியாக மக்களுக்குச் செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக இருப்பதால்தான் நோய்த் தொற்று குறைந்து வருகிறது. சென்னையைத் தொடர்ந்து கோவையிலும் கார் ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டு வர பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இன்னும் இரு தினங்களில் முதற்கட்டமாக 50 ஆம்புலன்ஸ்கள் மூலம் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கத் திட்டமிட்டிருக்கிறது.

அதேவேளைக் கோவையில் அதிக அளவில் நோய் பரவுவதற்கு அதிக தொழிற்சாலைகள் இயங்குவதே காரணம். தொழில் நிறுவனங்களைத் தீவிரமாகக் கண்காணித்து அனுமதி மீறி இயக்கப்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை வந்த

முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோவையைச் சேர்ந்த தொழில் அமைப்பினர் கோடிக்கணக்கில் கொரோனா நிதி வழங்கிய நிலையில் தொழில் நிறுவனங்கள்தான் கொரோனா பரவலுக்குக் காரணம் என அமைச்சர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad