ஆய்வுக்குக் கோவை சென்ற அமைச்சர்கள் தனியார் மருத்துவமனையைத் திறந்து வைத்தனர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 28, 2021

ஆய்வுக்குக் கோவை சென்ற அமைச்சர்கள் தனியார் மருத்துவமனையைத் திறந்து வைத்தனர்!

ஆய்வுக்குக் கோவை சென்ற அமைச்சர்கள் தனியார் மருத்துவமனையைத் திறந்து வைத்தனர்!



கோவை வந்திருந்த அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் கொரோனா தொற்று சிகிச்சை தொடர்பாக ஆய்வு நடத்தினர்.

கோவை சின்னவேடம்பட்டியில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய நூறு படுக்கைகள் கொண்ட தனியார் நிறுவனமான சிஆர்ஐ அறக்கட்டளையின், “கொரோனா பெருந்தொற்று நோய் சிகிச்சை” மருத்துவமனையை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர் நடராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்திக், சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் இராமமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

இந்த மருத்துவமனையைத் திறந்து இருப்பதன் மூலம் அது கோவையில் கொரோனாவை கையாளக் கூடுதல் உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அதேவேளைத் தனியார் சிகிச்சை முறைகள் குறித்து அரசு தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் குரலாக உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad