பில்கேட்ஸ் - மெலிண்டா விவாகரத்து: முடிவுக்கு வந்த 27 ஆண்டுகால இணை வாழ்க்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 4, 2021

பில்கேட்ஸ் - மெலிண்டா விவாகரத்து: முடிவுக்கு வந்த 27 ஆண்டுகால இணை வாழ்க்கை!

பில்கேட்ஸ் - மெலிண்டா விவாகரத்து: முடிவுக்கு வந்த 27 ஆண்டுகால இணை வாழ்க்கை!


உலக பணக்காரர் வரிசையில் நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்தவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் (65). அதன்பின்னர், அந்நிறுவனத்தில் தலைவராக இருந்த அவர், தற்போது 56 வயதாகும் மெலிண்டாவை கடந்த 1994ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
1987ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த போது அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் டேட்டிங் செய்தி இறுதியாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட பட்டியலின்படி, 124 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுடன் உலக பணக்காரர்கள் வரிசையில் நான்காம் இடத்தில் தற்போது பில் கேட்ஸ் இருக்கிறார்.

பில் கேட்ஸும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸும் இணைந்து பில் அண்ட் மெலிண்டா ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி அதன் மூலம் உலகம் முழுவதும் பல்வேறு தொண்டுப் பணிகளை செய்து வருகின்றனர். உலகளாவிய சுகாதாரம், பாலின சமத்துவம், கல்வி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது இவர்களது அறக்கட்டளை. கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்காகக் கடந்த ஆண்டில் மட்டும் 1.75 பில்லியன் டாலர்கள் இந்த அறக்கட்டளை மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பில் கேட்ஸும் அவரது மனைவி மெலிண்டாவும் பரஸ்பரம் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளனர். இதற்கான அறிவிப்பை பில்கேட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “நாங்கள் திருமண உறவில் இணைந்து இனி ஒரு வளர்ச்சியை அடைய முடியாது என நினைக்கிறோம். நிறையச் சிந்தித்து, இந்த உறவைப் பாதுகாத்துக் கொள்ள நிறைய முயற்சித்து, அதன் பின்னரே எங்கள் திருமண உறவை முறித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளோம்” என்று அதில தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “கடந்த 27 ஆண்டுகளாக எங்களுடைய சிறந்த பிள்ளைகளை வளர்த்தெடுத்தோம். ஒரு சிறந்த அறக்கட்டளையை கட்டமைத்தோம். உலக அளவில் அனைத்து மக்களும் ஆரோக்கியமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் வாழ அது உதவியது. அறக்கட்டளை பணியில் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளோம். ஆனால், வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு செல்லும்போது ஒரு தம்பதியாக இணைந்து வளர முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. எங்களது புதிய வாழ்வை முன்னெடுக்கும் பயணத்தில் எங்கள் குடும்பத்திற்கு தனிமையும், தனி வாழ்வுக்கான இடமும் தேவைப்படுகிறது. அதனை கொடுத்து மதிக்கக் கேட்டுக் கொள்கிறோம்” என்று இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பில் கேட்ஸ் பகிர்ந்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad