தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுத்தேர்வு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் தேர்வு ஒன்றை பள்ளி அளவில் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும். மதிப்பெண்களை உயர்த்த விரும்பும் மாணவர்கள் தேர்வு எழுதலாம். விருப்பமில்லாத மாணவர்கள் குறைந்தபட்சமாக தேர்ச்சி செய்யப்படுவர் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்ற விருப்பம் உள்ள மாணவர்கள் இந்த தேர்வினை எழுதலாம் என்றும் இந்தத் தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமில்லை என்றும் பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment